ஒரே மாதத்தில் ₹10 லட்சம் கோடியை நெருங்கிய UPI பரிவர்த்தனை; காரணங்கள் இவைதான்!

இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிவேகமாக வளர்ந்து வருகிறது. அவற்றில் யு.பி.ஐ மூலமானப் பணப் பரிவர்த்தனை அசுர வளர்ச்சி கண்டுள்ளது.

நடப்பு நிதி ஆண்டின் முதல் மாதமான முடிந்த ஏப்ரலில் யு.பி.ஐ பணப் பரிவர்த்தனை ரூ.10 லட்சம் கோடியை நெருங்கியுள்ளது. அதாவது, 9.83 லட்சம் கோடி ரூபாய்க்கு பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது. இதுவரை இந்த அளவுக்குப் பணப் பரிவர்த்தனை ஆனதில்லை எனும் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட இரண்டு மடங்கு உயர்வாகும்.

கடந்த ஏப்ரல் 202-ல் 264 கோடி எண்ணிக்கையிலான யு.பி.ஐ பரிவத்தனைகள் நடந்துள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.4.93 லட்சம் கோடி ஆகும்.

UPI

அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்பாட்டுக்கு மாறியதும், அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்ற அரசின் தீவிர முயற்சியும், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கசலுகைகள் வழங்கியதுடன், ரொக்கப் பணப்பரிவர்த்தனையைக் குறைக்க ஏ.டி.எம்-ல் பணம் எடுப்பதில் கட்டுப்பாடுகள், கட்டணங்கள் உயர்வு போன்ற பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன

இதன் காரணமாக மக்கள் ரொக்கப் பணப் பரிவர்த்தனையைப் பெருமளவு குறைத்து வருகிறார்கள். டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் யு.பி.ஐ பரிவர்த்தனை மிகவும் எளிமையானதாகவும், விரைவானதாகவும் இருப்பது அதன் மீதான கவர்ச்சியை அதிகப்படுத்தியது. குறைந்தபட்ச ஸ்மார்ட்போன் பயன்பாட்டு அறிவு இருந்தால் போதும், யார் வேண்டுமானலும் யு.பி.ஐ மூலமாகப் பணம் அனுப்பிவிட முடியும். மட்டுமல்லாமல் ஒரு ரூபாய்கூட அனுப்ப முடியும் என்பது யு.பி.ஐ பரிவத்தனையின் முக்கிய அம்சமாகும்.

யுபிஐ

இதனால் 2022 ஏப்ரல் மாதத்தில் 558 கோடி அளவிலான யு.பி.ஐ பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.9.83 லட்சம் கோடி.

கடந்த மார்ச் மாதத்தில் முதல் முறையாக யு.பி.ஐ பணப் பரிவர்த்தனை எண்ணிக்கை 500 கோடியைத் தாண்டியது. ஏப்ரலில் மார்ச் மாதத்தை விட எண்ணிக்கையில் 3.33 சதவிகிதம் உயர்ந்தது. மதிப்பளவில் 2.36% உயர்ந்துள்ளது.

அடுத்த சில ஆண்டுகளில் ஆன்லைன் மூலம் நடக்கும் பணப் பரிவர்த்தனை மதிப்பு ரூ.20 லட்சம் கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.