கடும் வெப்பம், அனல் காற்று: மாநிலங்களுடன் பிரதமர் அலுவலக முதன்மை செயலாளர் இன்று அவசர ஆலோசனை

புதுடெல்லி,
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இதனால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக, வடமாநிலங்களில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. கடும் வெப்பம் காரணமாக அனல் காற்று வீசி வருகிறது.

ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மராட்டியம், டெல்லி, மத்தியபிரதேசம் என பல்வேறு வடமாநிலங்களை வெப்பம் வாட்டி வதைக்கிறது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக அளவில் வெப்பம் பதிவாகியுள்ளது. 
வடகிழக்கு மற்றும் மத்திய இந்தியாவில் கடந்த 122 ஆண்டுகளில் ஏப்ரல் மாத வெப்பநிலை இந்த ஆண்டு அதிகமாக பதிவாகியுள்ளது. பல மாநிலங்களில் வெப்பம் 45 டிகிரி செல்சியசை தாண்டி பதிவாகியுள்ளது. வெப்பம் அதிகரித்து வருவதால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், நாடு முழுவதும் கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்று வீசும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கங்களை சேர்ந்த அதிகாரிகளுடன் பிரதமர் அலுவலக முதன்மைச் செயலாளர் பி.கே.மிஸ்ரா இன்று மாலை அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் வெப்பம் மற்றும் அனல் காற்று வீசும் சூழ்நிலையை கையாள்வது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.