காவிரி ஆற்றுப்பாலத்திலிருந்து குதித்து பெண் தற்கொலை முயற்சி – குடும்ப பிரச்னை காரணமா?

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் குடும்ப பிரச்னை காரணமாக, பெண் ஒருவர் காவிரி ஆற்றின் பாலத்தில் இருந்து, குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை முயற்சி செய்வது தொடர் கதையாகி வரும் நிலையில், இதனைத் தடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ஆவத்திபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராதா. விசைத்தறி கூலித் தொழிலாளியான இவர் குடும்ப பிரச்னை காரணமாக மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். இதனையடுத்து ராதா இன்று ஈரோடு செல்லும் சாலையில் உள்ள காவிரி ஆற்றின் பாலத்திலிருந்து, காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார்.
image
அப்போது ஆற்றின் நடுவே பரிசலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த பெண்ணை பரிசலில் ஏற்ற முயற்சி செய்துள்ளார். அப்போது வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த இளைஞர் ஒருவர் தண்ணீரில் குத்தித்து தற்கொலைக்கு முயன்ற ராதாவை பரிசலில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்தனர்.
image
இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு பள்ளிபாளையம் போலீசார் ராதாவை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காவிரி ஆற்றின் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபடுவர்கள் எண்ணிக்கையானது, தொடர்ந்து அதிகரித்து வருவதால், விழிப்புணர்வு பேனர்கள் வைத்து காவல்துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.