சாலை விதிமுறை மீறல் குறித்து ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப் ஆகியவற்றில் புகார் தெரிவிக்கலாம்.. சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையின் புது முயற்சி

சென்னையில் சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் குறித்து சமூகவலைதளம் மூலம் புகார் அளிக்கலாம் என்றும், இதுபோன்று அளிக்கப்படும் புகாரை கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை பார்த்தால், புகைப்படம் எடுத்து சென்னை போக்குவரத்து காவல்துறையின் சமூக வலைதளமான ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்டவற்றில் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

போகுவரத்து போலீசார் மற்றும் சிசிடிவி கேமிராக்கள் மட்டுமல்லாது, உடன்வரும் வாகன ஓட்டிகள் மூலம் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்கிறார்கள் என்பதை அறிந்து சாலை விதிமுறைகளை ஒழுங்காக கடைபிடிப்பார்கள் என தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.