'தடுப்பூசி போட கட்டாயப்படுத்த கூடாது' – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி பொது மக்கள் யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என, உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி
செலுத்துவது கட்டாயம் என, பல்வேறு மாநில அரசுகள் அரசாணை வெளியிட்டு இருந்தன. மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே பொது இடங்களில் அனுமதிக்கப்படுவர் என்றும் மாநில அரசுகள் தெரிவித்திருந்தன.

இதற்கிடையே, மாநில அரசுகளின் உத்தரவுகளை எதிர்த்து, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இன்று, உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த உத்தரவில் தெரிவித்து இருப்பதாவது:

எந்தவொரு தனி நபரையும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது. சில நிபந்தனைகளை உருவாக்கி, அதன் கொள்கைகளை வகுக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் அரசியல் சாசனப் பிரிவு 21-ன் கீழ், தடுப்பூசியை செலுத்திக் கொள்ள யாரையும் கட்டாயப்படுத்த முடியாது.

கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு வரக்கூடாது என்ற கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் நீக்க வேண்டும். மேலும், கொரோனா தடுப்பூசியினால் ஏற்படும் எதிர்மறை நிகழ்வுகளை வெளிப்படையாக மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உளளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.