தி.மு.க., சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

திருக்கனுார் : திருக்கனுாரில் தி.மு.க., சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது.தி.மு.க., சார்பில் திருக்கனுார் பள்ளி வாசலில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு நேற்று ஏற்பாடு செய்தனர். இதற்கு, பள்ளிவாசல் நிர்வாகத்தை சேர்ந்த ஒரு தரப்பினர், எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் பதற்றம் நிலவியதால், மேற்கு எஸ்.பி., ஜிந்தா கோதண்டராமன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.அதையடுத்து, இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி, பள்ளிவாசலுக்கு வெளியே நடந்தது. எதிர்க்கட்சித் தலைவர் சிவா, துவக்கி வைத்தார். எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, சம்பத், துணை அமைப்பாளர்கள் குமார், வழக்கறிஞர் செந்தில்குமார், தொண்டரணி அமைப்பாளர் செந்தில்வேலன், தொகுதி பொறுப்பாளர் கலைவாணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆளும் என்.ஆர்.காங்., கட்சியை சேர்ந்த முன்னாள் துணை சபாநாயகர் செல்வம் கலந்து கொண்டார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.