புதுச்சேரி : மே தினத்தை முன்னிட்டு நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பதினோரு கிராம பஞ்சாயத்துகளில் கிராமசபை கூட்டங்கள் நடந்தன.இதில், அந்தந்த கிராமத்தில் நிலவும் மக்களின் அடிப்படை பிரச்னைகள், மத்திய மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.
அவற்றை தீர்த்து வைப்பதற்கான வழிமுறைகள் பற்றி தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. ஏரிப்பாக்கம் ஆரம்பப் பள்ளியில் நேற்று நடந்த கிராம சபை கூட்டத்திற்கு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில், பொதுமக்கள் கூறிய பிரச்னைகளை நேரில் சென்று ஆய்வு செய்யப்பட்டது.இதில் சிதிலமடைந்து விழும் நிலையில் பொது இடத்தில் உள்ள சிலை, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கொம்யூன் பஞ்சாயத்து நிலம், பாழடைந்துள்ள சமுதாய கூட வளாகம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வளாகம், மற்றும் நத்தமேடு கிராமப்பகுதி மக்களின் சுடுகாட்டு பகுதி ஆகியவை பார்வையிடப்பட்டது.இக்கூட்டத்தில் ஆணையர் ஜெயக்குமார், ஏரிப்பாக்கம் நத்தமேடு கிராம மக்கள் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Advertisement