பராக் அகர்வாலுக்கு கல்தா ? எலான் மஸ்க் முடிவு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சான் பிரான்சிஸ்கோ : டுவிட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ. பராக் அகர்வாலை மாற்ற எலான் மஸ்க் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், சமூக ஊடக நிறுவனமான டுவிட்டரை, ரூ.3.39 லட்சம் கோடிக்கு வாங்கியுள்ளார்.யாருமே எதிர்பார்க்காத இவ்வளவு பெரிய டீலை, இவ்வளவு சீக்கிரமாக எலான் மஸ்க் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.

latest tamil news

அடுத்தகட்டமாக, டுவிட்டர் நிறுவனம் இனி என்னவாகும் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ள நிலையில், டுவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ வாகவும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும் உள்ள பராக் அகர்வால் இந்தாண்டு நவம்பர் வரை பதவியில் இருப்பார் எனவும் புதிய சி.இ.ஓ.வை நியமிக்க எலான் மஸ்க் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.