பூரணாங்குப்பத்தில் கிராம சபை கூட்டம்| Dinamalar

அரியாங்குப்பம் : தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது.மே தினத்தையொட்டி, அரியாங்குப்பம் கொம்யூனுக்கு உட்பட்ட ஓடைவெளி, பூரணாங்குப்பம், டி.என். பாளையம் உள்ளிட்ட இடங்களில் கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது.

பல்வேறு துறை அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், பொதுமக்கள் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தருமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் அங்காளம்மன் கோவிலில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு சபாநாயகர் செல்வம் தலைமை தாங்கினார்.அரியாங்குப்பம் கொம்யூன் ஆணையர் ரமேஷ் முன்னிலை வகித்தார். உதவிப் பொறியாளர் நாகராஜ், இளநிலை பொறியாளர் அகிலன், சரஸ்வதி, கூட்டுறவு தொடக்க வேளாண்மை சங்க தலைவர் தஷ்ணாமூர்த்தி, தொகுதி பா.ஜ., தலைவர் லட்சுமிகாந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.