மதுரை பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவிகள் மோதிக்கொண்ட சம்பவம் ; 5ஆம் தேதி வரை பள்ளிக்கு வரவேண்டாம் என்று உத்தரவு

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் மோதலில் ஈடுபட்ட இருவேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள், 5ஆம் தேதி வரை பள்ளிக்கு வரவேண்டாம் என்றும் தேர்வு அன்று பெற்றோருடன் பள்ளிக்கு வரவேண்டும் என்றும் மாவட்டக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பெரியார் பேருந்து நிலையத்தில் கடந்த சனிக்கிழமை இருவேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து மாவட்டக் கல்வித்துறை சார்பில் அமைக்கப்பட்ட குழு, விசாரணை மேற்கொண்டது.

பேருந்து நிலையத்தில் ஓடிப் பிடித்து விளையாடும்போது உருவான சிறு பிரச்சனை வாக்குவாதம் ஆகி, இரு குழுக்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும் இடையிலான சண்டையாக மாறியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்மந்தப்பட்ட மாணவிகள் வரும் 5ஆம் தேதி தேர்வு நாளன்று பெற்றோருடன் பள்ளிக்கு வரவேண்டும் என்றும் தேர்வு முடியும் வரை பெற்றோர் உடன் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ள மாவட்டக் கல்வித்துறை, அதுவரை குறிப்பிட்ட அந்த மாணவிகள் பள்ளிக்கு வரவேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.