வாக்குவாதத்தால் ஆத்திரம் – கல்லூரி மாணவர் மீது காரை ஏற்றி சென்ற இளைஞர்கள்! வீடியோ வைரல்

சாலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் மீது இளைஞர்கள் சிலர் காரை ஏற்றிச் சென்ற சம்பவம் நொய்டாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள கல்லூரியில் பயிலும் மாணவர்கள் 5 பேர், ஹோட்டலுக்கு சென்றுவிட்டு நள்ளிரவு 1.30 மணியளவில் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது வேறு சில இளைஞர்கள் ஓட்டி வந்த கார், கல்லூரி மாணவர்களின் கார் மீது லேசாக உரசியுள்ளது. இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
image
இதில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் மீது காரை ஏற்றி சென்றனர். இதில் மோத்வானி என்ற மாணவர் படுகாயமடைந்தார். அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த நொய்டா போலீஸார், சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு 4 இளைஞர்களை கைது செய்துள்ளனர். இதனிடையே, கல்லூரி மாணவர் மீது கார் ஏறிச் சென்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.