விமானம் தரையிறங்கும் போது குலுங்கியதில் காயமடைந்த 14 பயணிகளில் 2 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

ஸ்பைஸ் ஜெட் விமானம் தரையிறங்கும் போது குலுங்கியதில் காயமடைந்த 14 பயணிகளில் 2 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் குறித்து விசாரணை தொடங்கியுள்ளதாகவும் விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

மும்பையில் இருந்து மேற்கு வங்கத்தின் துர்காபூருக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் நூறுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. துர்காபூர் அருகே விமானம் தரையிறங்க தாழ்வாக பறந்தபோது, காற்றின் வேகத்தில் குலுங்கியதில் பயணிகள், விமான பணியாளர்கள் உள்ளிட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து கொல்கத்தா விமான நிலையத்தில் நிறுத்தப்பட்ட அந்த விமானத்தை விமான போக்குவரத்து இயக்குனரக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.