4 மாணவர்களுடன் ஓரினச்சேர்க்கை பாதிரியாருக்கு 18 வருடம் கடுங்காவல்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் தாமஸ் (58). கொட்டாரக்கரையில் உள்ள ஹோலிகிராஸ் ஆலயத்திலும், கொல்லம் கோட்டாத்தலை செயின்ட் மேரீஸ் ஆலயத்திலும் பாதிரியாராக இருந்தார். கடந்த 2016ம் ஆண்டில் கொட்டாரக்கரை ஹோலி கிராஸ் ஆலயத்தில் பாதிரியாராக இருந்தார். இந்த ஆலயத்தை ஒட்டி ஒரு கிறிஸ்தவ மத பாடசாலை உள்ளது. இங்கு ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இங்கு படித்து வந்த 4 மாணவர்களை பாதிரியார் தாமஸ் தனது அறைக்கு அழைத்து சென்று மிரட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தி உள்ளார். இதுகுறித்து திருவனந்தபுரம் சிறுவர் நல ஆணையத்திற்கு புகார் வந்தது. இதையடுத்து நடந்த விசாரணையில் பாதிரியார் தாமஸ் மாணவர்களை மிரட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இது தொடர்பாக புனலூர் போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து பாதிரியார் தாமசை கைது செய்தனர். இந்த வழக்கு கொல்லம் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுஜித், பாதிரியார் தாமசுக்கு 18 வருடம் கடுங்காவல் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.