இறந்தவர் உடலுடன் செல்பி எடுத்து அனுப்பினால் மட்டுமே விடுமுறை| Dinamalar

ஹைதராபாத் : உறவினர் இறந்து விட்டதால் அவசர விடுமுறை கேட்ட அரசுப் போக்குவரத்துக் கழக டிரைவரிடம் இறந்தவருடன் ‘செல்பி’ எடுத்து அனுப்பினால் தான் விடுமுறை என மேலாளர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இம்மாநில அரசுப் போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் டிரைவர் ஒருவரின் உறவினர் சமீபத்தில் மரணம் அடைந்தார். இதையடுத்து அந்த டிரைவர் தன் மேலாளருக்கு போன் செய்து அவசர விடுமுறை கேட்டார். ஆனால் மேலாளரோ இறந்தவருடன் ‘செல்பி’ எடுத்து அனுப்பினால்தான் விடுமுறை தர முடியும் என மிரட்டியுள்ளார்.

இதனால் அந்த டிரைவர் அதிர்ச்சி அடைந்தார். இறந்தவருடன் எப்படி செல்பி எடுக்க முடியும் என நெருங்கிய நண்பர்களிடமும் சக ஊழியர்களிடமும் கூறி வருத்தப்பட்டார். உயர் அதிகாரி வி.எஸ்.ராவ் கூறுகையில்“இதுபற்றி விசாரித்து மேலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்”என்றார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.