'எங்களது வலிமைக்கு இஸ்லாமியர்கள் தான் காரணம்!' – அதிபர் பைடன் பேச்சு!

உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் வன்முறையால் பாதிக்கப்படுகிறார்கள் என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்து உள்ளார்.

அமெரிக்க அதிபர் மாளிகையில்
ரம்ஜான்
விழா நடந்தது. அதில் கலந்து கொண்டு அதிபர் ஜோ பைடன் கூறியதாவது:

இன்று உலகம் முழுவதும் ரம்ஜான் விழா கொண்டாடப்படுகிறது. ஆனால் எல்லாராலும் இதை உற்சாகமாக கொண்டாட முடியவில்லை என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். பல்வேறு நாடுகளிலும் நிலவும் வறுமை, வன்முறை, நோய் பரவல் காரணமாக இந்த நிலை உள்ளது. உலகம் முழுவதும் அமைதி நிலவுவதற்கான அறிகுறிகள் உள்ளன. உலகம் வளர்ச்சியை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது. பல நாடுகளில் அமைதியாக ரம்ஜான் கொண்டாட அனுமதிக்கப்பட்டு உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஆனால் அதே சமயத்தில் உலகம் முழுவதும் இஸ்லாமியர்களுக்கு பல்வேறு விதமான சவால்களும், சோதனைகளும் நீடிப்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். இஸ்லாமியர்களால் தான் ஒவ்வொரு நாளும்
அமெரிக்கா
வலிமை பெற்று வருகிறது. அவர்களது உழைப்பு முக்கிய பங்கு வகித்துள்ளது.

ஏலத்துக்கு வரும் உலகின் மிகப்பெரிய விஸ்கி பாட்டில்… மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இஸ்லாமியர்கள் உலகம் முழுவதும் பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்படுகிறார்கள். உலகளவில் வன்முறையால் அதிகம் பாதிக்கப்படுவது இஸ்லாமியர்கள் தான். சர்வதேச அமைப்புக்கு நான் இஸ்லாமியரைத் தான் தூதராக அமைத்துள்ளேன். இந்த புனித பண்டிகையை கொண்டாட முடியாத உய்குர்ஸ், ரோஹிங்கியா இன மக்களையும் நாம் நினைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.