ஒரே குடும்பத்தில் மூவர் சாலை விபத்தில் பலி| Dinamalar

துமகூரு : குனிகல்லின் ஹொன்னமாச்சனஹள்ளி அருகில், நேற்று மாலை ஏற்பட்ட சாலை விபத்தில், ஒரே குடும்பத்தில் மூவர் உயிரிழந்தனர்.ராம்நகர் சென்னப்பட்டாவின், ஷாமியா மொஹல்லாவில் வசித்தவர் சையத் முகமது நஜ்மி, 42. நேற்று தன் குடும்பத்துடன் ரம்ஜானை கொண்டாடினார்.

நேற்று மாலை, பத்ராவதியில் உள்ள தன் உறவினர் வீட்டுக்கு காரில் புறப்பட்டார்.துமகூரு குனிகல்லின், மாநில நெடுஞ்சாலை 33ல், அரமனே ஹொன்னமாச்சனஹள்ளி அருகில் செல்லும் போது வேகமாக வந்த லாரி, கார் மீது மோதியது.இதில் சையத் முகமது நஜ்மி; மனைவி நாஜியா, 30; மகன் சைஹத்குத் மீர் ஹசி, 2 ஆகிய மூவர் உயிரிழந்தனர்.காயமடைந்த மற்றொரு மகன் சைஹத்குத் மீர் நபி, 3, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.ஹுலியூரு துர்கா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.