கணவன் சந்தேகத்தை போக்க கையில் சூடம் ஏற்றிய மனைவி| Dinamalar

கோலார் : தன் நடத்தையை சந்தேகித்த கணவன் கேட்டதால் கையில் சூடம் ஏற்றிக் காட்டிய பெண்ணின் கை கருகியது.

கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் உள்ள வீரனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் ஆனந்த். இவருக்கு 14 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தன் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டார். இதனால் கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.கடந்த வாரம் ஏற்பட்ட தகராறின் போது ‘நீ கற்பு உள்ளவள் என்றால் கையில் சூடம் ஏற்றிக் காட்டு’ என ஆனந்த் தன் மனைவியிடம் கூறியுள்ளார்.

அவரும் தன் உள்ளங்கையில் சூடம் ஏற்றிக்காட்ட தீ திடீரென கை முழுதும் பரவியது. மனைவி அலறவே கணவன் தப்பி ஓடினார். அக்கம் பக்கத்தினர் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய கணவனை தேடி வருகின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.