காதலியுடன் செல்ல இருசக்கர வாகனம் கேட்ட மாணவர்.. வாங்கி தரமறுத்தால் எடுத்த விபரீத முடிவு..!

பைக் வாங்கி தராததால் இளைஞர் தற்கொலை செய்து சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் பாரதியார் தெருவில் வசித்து வருபவர்  கன்னியப்பன். இவரது மகன் நாகராஜ்  அங்குள்ள பாலிடெகினில் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.  கடந்த சில தினங்களுக்கு முன் தனது தந்தையிடம் அவர் இருசக்கர வாகனம் வாங்கி தருமாறு கேட்டுள்ளார்.

ஆனால், குடும்ப சூழல் காரணமாக அவர் அதற்கு மறுத்துள்ளார். காதலியை அழைத்து செல்ல பைக் வேண்டும் என கட்டாயப்படுத்தி கேட்டுள்ளார். அதற்கு அவர் ஒப்புகொள்ளவில்லை என கூறப்படுகிறது, இதனால், அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து, அவர் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.