கேரளாவில் மந்திரியின் பாதுகாவலர் மீது இளம்பெண் புகார்

திருவனந்தபுரம்:

கேரளாவில் கால்நடை பாதுகாப்புத்துறை மந்திரியாக இருப்பவர் சிஞ்சு ராணி. இவரது பாதுகாவலர் பணியில் இருப்பவர் போலீஸ்காரர் சுஜித் (வயது 33).

திருச்சூர் மாவட்டம் வெள்ளிக்குளங்கரையைச் சேர்ந்த இவர் மீது அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு உறவினர் வீட்டுக்குச் சென்ற நான், அங்கு வெளியே நின்று கொண்டு மற்றொரு உறவினருடன் வீடியோ காலில் பேசினேன்.

அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும், போலீஸ்காரர் சுஜித்துக்கு அந்த வீடியோ எப்படியோ கிடைத்துள்ளது. அதனை காண்பித்து என்னை அவர் மிரட்டி வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பாக போலீஸ்காரர் சுஜித் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மந்திரியின் பாதுகாவலர் மீது பெண் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.