சண்டிகரில் கொரோனா தடுப்பூசி செலுத்தாத 12 முதல் 18 வயது மாணவர்களுக்கு வகுப்பறையில் அனுமதி இல்லை: மாநில அரசு அறிவிப்பு

டெல்லி: சண்டிகரில் கொரோனா தடுப்பூசி செலுத்தாத 12 முதல் 18 வயது மாணவர்களுக்கு வகுப்பறையில் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி கடந்த சில மாதங்களாக தொற்று பாதிப்பு குறைந்த நிலையில், தற்போது மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.இந்நிலையில் இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி 12 முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும்  தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.  இந்த நிலையில், சண்டிகரில் கொரோனா தடுப்பூசி செலுத்தாத 12 முதல் 18 வயது மாணவர்களுக்கு வகுப்பறையில் அனுமதி இல்லை என்றும், தடுப்பூசி செலுத்தாத மாணவர்களுக்கு நாளை முதல் நேரடி வகுப்பில் அனுமதி இல்லை என்றும் சண்டிகர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.