தரையிறங்கும் போது விமானம் குலுங்கியதில் 17 பேர் காயம் – பரிசோதனைக்குள்ளாகும் ஸ்பைஸ் ஜெட் விமானங்கள்

மேற்கு வங்கத்தில் ஸ்பைஸ்ஜெட் விமானம் தரையிறங்கும் போது குலுங்கியதில் பயணிகள் உள்பட 17 பேர் காயமடைந்ததைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் அனைத்து விமானங்களையும் பரிசோதிக்கும் நடவடிக்கையை விமான போக்குவரத்து இயக்குனரகம் தொடங்கியுள்ளது.

கடந்த ஞாயிறன்று மும்பையிலிருந்து மேற்கு வங்கத்தின் துர்காபூர் நோக்கிச் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் தரையிறங்க தாழ்வாக பறந்தபோது, காற்றின் வேகத்தில் குலுங்கியதில் 14 பயணிகள் மற்றும் 3 ஊழியர்கள் பலத்த காயமடைந்தனர்.

அதில் இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சம்பவம் குறித்து விசாரணை தொடங்கிய நிலையில், அந்த நிறுவனத்தின் அனைத்து விமானங்களையும் பரிசோதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.