துரிதமான முதலீட்டு வாய்ப்புக்களை அடையாளம் காண்பதில் அரசாங்கம் கூடுதல் கவனம்

முதலீட்டு வாய்ப்புக்களை அடையாளம்; காண்பதற்காக உப குழுவொன்றை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

10.  துரித முதலீட்டு வாய்ப்புக்களை அடையாளங் காணல்

நாட்டில் தற்போது நிலவுகின்ற வெளிநாட்டு செலாவணி நெருக்கடிக்கு தீர்வாக துரிதமாக வெளிநாட்டு முதலீடுகளைக் கவர்ந்திழுக்கக் கூடிய வகையிலான முதலீட்டு வாய்ப்புக்களை அடையாளங் காண்பதற்காக கீழ்வரும் அமைச்சர்களுடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

  • கௌரவ (கலாநிதி) நாலக கொடஹேவா அவர்கள்

வெகுசன ஊடக அமைச்சர் – தலைவர்

  • கௌரவ திலும் அமுனுகம அவர்கள்

போக்குவரத்து மற்றும் கைத்தொழில் அமைச்சர்

  • கௌரவ கஞ்சன விஜேசேகர அவர்கள்

எரிசக்தி அமைச்சர் மற்றும் மின்வலு அமைச்சர்

  • கௌரவ பிரமித பண்டார தென்னகோன் அவர்கள்

துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர்

  • கௌரவ லொஹான் ரத்வத்த அவர்கள்

நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.