ஆரிய வைசிய மகா சபா சார்பில் இறுதி சடங்கிற்கு நிதியுதவி திட்டம்| Dinamalar

புதுச்சேரி : புதுச்சேரி மண்ணின் மைந்தர்கள் ஆரிய வைசிய மகா சபா சார்பில், இறுதி சடங்கிற்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தை அமைச்சர் லட்சுமி நாராயணன் துவக்கி வைத்தார்.புதுச்சேரி மண்ணின் மைந்தர்கள் ஆரிய வைசிய மகா சபா (பூமா வைஸ்யா), கடந்த நான்கு ஆண்டுகளாக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அந்த வரிசையில், சபா உறுப்பினர்களின் இறுதி சடங்கிற்கு 10,000 ரூபாயை கொடையாக வழங்கும் திட்டத்தின் துவக்க விழா, புதுச்சேரி, வாசவி திருமண மண்டபத்தில் நடந்தது.பூமா வைசியா தலைவர் தயானந்த குப்தா தலைமை தாங்கினார். பேராசிரியர் கோபால் நோக்கவுரையாற்றினார். அமைச்சர் லட்சுமி நாராயணன் திட்டத்தை துவக்கி வைத்து, இத்திட்டத்திற்காக பண உதவி செய்தவர்களை கவுரவித்தார்.ஏற்பாடுகளை செயலர் ஸ்ரீதரன், பொருளாளர் பிரகாசம் செய்திருந்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.