ஐபிஎல் : தோல்வி என்பது விளையாட்டின் ஒரு பகுதி – ஹார்திக் பாண்டியா

மும்பை,
10 அணிகள் இடையிலான 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் நடந்து வருகிறது. நவி மும்பையில் உள்ள டி ஒய் பாட்டில் மைதானத்தில் நேற்று   நடைபெற்ற 48-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன் பெற்றது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 65 ரன் எடுத்தார். பஞ்சாப் தரப்பில் ரபடா 4 விக்கெட் கைப்பற்றினார்.
பின்னர் விளையாடிய பஞ்சாப் 16 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 145 ரன் எடுத்து வென்றது. ஷிகர் தவான் 62 ரன்னும், பானுகா ராஜபக்சே 40 ரன்னும், லிவிங்ஸ்டன் 10 பந்தில் 30 ரன்னும் எடுத்தனர்.
இந்நிலையில் போட்டிக்கு பிறகு தோல்வி குறித்து குஜராத் அணி கேப்டன் ஹார்திக் பாண்டியா கூறியதாவது ;
நாங்கள் 170 ரன் எடுத்திருந்தால் சிறந்த ஸ்கோராக இருந்திருக்கும். ஆனால் நாங்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தோம். முதலில் பேட்டிங் செய்ததற்கான எனது முடிவை நான் ஆதரிக்கிறேன்.
முதலில் பேட்டிங் செய்யும்போது இலக்குகளை எவ்வாறு நிர்ணயிப்பது என்பதை அறிந்திருக்க வேண்டும்  . தோல்வி என்பது விளையாட்டின் ஒரு பகுதியாகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.