தம்பி இறந்த துக்கம் தாங்காமல் அதே நாளில் அண்ணனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அம்பத்தூர் அருகே கொரட்டூர் எல்லையம்மன் நகரை சேர்ந்தவர் சேட்டு. இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய தம்பி சுரேஷூம் அதே பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் சுரேஷ் நேற்று மதியம் வயிற்று வலி தாங்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தம்பி இறந்த செய்தியைக் கேட்ட அண்ணன் சேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இன்னிலையில் அண்ணன் சேட்டு துக்கம் தாங்க முடியாமல் நேற்று இரவு மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்த அவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தம்பி இறந்த துக்கம் தாங்காமல் அதே நாளில் அண்ணனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.