கடலூர் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் உயிரிழந்தவர்கள் பெயரில் முறைகேடு: 20 பேர் மீது வழக்கு பதிவு

கடலூர் : கடலூர் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் உயிரிழந்தவர்கள் பெயரில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.60 கோடி அளவுக்கு முறைகேடுகள் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முறைகேடு தொடர்பாக கடலூர் மாவட்ட வணிகவியல், குற்றவியல் புலனாய்வு பிரிவு காவல்துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.