கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் விழுந்த கார்.. 5 பேர் உயிர் தப்பினார்

கேரளா: கேரளா மாநிலம் காசர்கோடு அருகே கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் மீது மோதி விட்டு சாலையோரம் இருந்த சுற்று சுவரை இடித்து தள்ளி விட்டு 40 அடி கிணறுக்குள் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது . சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர் துரிதமாக செயல்பட்டு காருக்குள் இருந்த பச்சிளம் குழந்தை உட்பட 5 பேரை பாதுகாப்பாக மீட்டனர். காருக்குள் இருந்தவர்கள் அப்துல்காதர் மற்றும் அவரது குடும்பத்தினர் என்றும் விசாரணையில் தெரியவந்தது. நல்வாய்ப்பாக காரில் இருந்த 5 பேர் உயிர் தப்பினார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.