திருவனந்தபுரம்: கேரளாவில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு 11-ம் வகுப்பு மாணவி உயிரிழந்ததற்கு ஷிகெல்லா பாக்டீரியா தான் காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசுத்தமான தண்ணீர், உணவில் இந்த பாக்டீரியா பரவும் எனவும், ஷவர்மா சாப்பிட்ட மேலும் 3 மாணவிகளுக்கு ஷிகெல்லா பரவியுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.