திடீரென மைக் நீட்டிய செய்தியாளர்கள்… 'ஓ மை காட்'ன்னு சொன்ன மோடி!

அரசு முறை பயணமாக
பிரதமர் மோடி
பிரான்ஸ், ஜெர்மனி,
டென்மார்க்
ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தமது பிரான்ஸ் பயணத்துக்கு பிறகு டென்மார்க் சென்ற மோடி.

அங்கு அநநாட்டின் ராணி மார்க்ரெத்தை சந்தித்த பிரதமர், இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்புக்கு பின் பிரதமருக்கு டென்மார்க் அரசு சார்பில் விருந்து அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வுகளுக்கு பின், தமது காரில் பயணிக்க வந்த மோடியிடம் அங்கு கூடியிருந்த செய்தியாளர்கள் திடீரென மைக்கை நீட்டி, சார் எங்களை உள்ளே விடவில்லை அதனால்தான்… என்று சொல்ல, இதனை சற்று எதிர்பார்க்காத பிரதமர்,’
ஓ மை காட்
‘ என்று ரியாக்ஷன் செய்தபடி, நான் போய் அவர்களிடம் என்ன நடந்தது என்று கேட்கிறேன் என்ற சொல்லிவிட்டு எஸ்கேப் ஆனார்.

மீண்டும் சேர்ந்து வாழ விருப்பம்… மெலிண்டாவின் க்ரீன் சிக்னலுக்கு காத்திருக்கும் பில் கேட்ஸ்!

நாடாளுமன்றத்திலும், பொது கூட்டங்களிலும் தமக்கு ஈடாக பேச வேறு ஆளே இல்லை என்பது போல், பேச்சில் சும்மா பிச்சு உதறுவதில் பிரதமர் நரேந்திர மோடி வல்லவர் என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஆனால், பிரதமர் பதவிக்கு வந்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், இந்தியாவிலும், இந்தியாவுக்கு வெளியிலும் அவர் அனேகமாக இதுவரை அவர் செய்தியாளர்களை சந்தித்தே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.