தமிழகத்தில் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று சட்டசபை கூடுகிறது.
தமிழக சட்டசபையில் துறைவாரியான மானியக் கோரிக்கை மீதான விவாதம் ஏப்ரல் ஆறாம் தேதியில் இருந்து நடந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சனி, ஞாயிறு மற்றும் ரம்ஜான் பண்டிகை என தொடர்ந்து நான்கு நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இன்று இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் இன்று நடைபெற உள்ளது. மேலும் சட்டசபை கூட்டம் வருகின்ற 10ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.