சென்னை புழல் அடுத்த விநாயகபுரம் காஞ்சி நகரில் வசித்து வருபவர் சையத் சர்பிராஸ் நவாஸ். இவர் காங்கிரஸ் கட்சியின் பிரமுகராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் தனது 14 வயது சொந்த மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சிறுமியின் தாய் புழல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து தந்தை சையத் சர்பிராஸ் நவாஸிடம் நடத்திய விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும் அவரிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையில், அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.