விளையாடி கொண்டிருந்த 7 வயது சிறுமி உயிரிழப்பு.. சென்னையில் நடந்த சோகம்..!

7 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஓட்டேரி ஸ்டீபன் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் வினிதா .இவரது மகள்கவாஷ் ஷூ வீட்டில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஜன்னலில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த வினிதா உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.