3 மனைவிகளுடன் ஒரே நேரத்தில் முதலிரவு – கணவன் ஜாலி வாழ்க்கை!

மத்திய பிரதேச மாநிலத்தில், மூன்று காதலிகளை ஒரே நேரத்தில் கணவன் திருமணம் செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தில் வசித்து வருபவர், சம்ரத் மயுரியா. இவருக்கு வயது 42. இவர், போபாலில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நன்பூர் கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவராக பதவி வகித்துள்ளார்.

இந்நிலையில், மூன்று பெண்களை பல ஆண்டுகளாக சம்ரத் மயுரியா காதலித்து வந்தார். அவர் அந்த பெண்களை திருமணம் செய்யாமலே ஆறு குழந்தைகளை பெற்றெடுத்தார். இதை அடுத்து மூன்று காதலிகளையும் திருமணம் செய்ய, சம்ரத் மயுரியா முடிவெடுத்தார். இதன்படி அண்மையில் மூன்று பெண்களையும் சம்ரத் மயுரியா திருமணம் செய்து கொண்டார். இந்த விழாவில், அவர்களுக்கு பிறந்த ஆறு குழந்தைகளும் பங்கேற்றனர். இந்த திருமண விழா, மூன்று நாட்கள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

ஒரே மேடையில் மூன்று பெண்களுக்கும் தாலி கட்டி, மூவருடன் அவர் ஒரே நேரத்தில் முதலிரவு நடத்தினார். இந்த திருமணம் பற்றி மணமகன் சம்ரத் மயுரியா கூறுகையில், தான் 2003 ஆம் ஆண்டு தனது முதல் காதலியுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாகவும், கடந்த 15 ஆண்டுகளாக, எனது மற்ற இரண்டு பெண்களும் திருமணமாகாமலே தன்னுடன் வாழ்ந்து வருவதாகவும் கூறினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், சமூக வலைதளங்களில் செய்தி வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.