உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிமன்ற பதிவாளரின் கையெழுத்தை போலியாக போட்டு, பணி நியமன ஆணைகள் வழங்கிய 4 பேர் கைது.!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிமன்ற பதிவாளரின் கையெழுத்தை போலியாக போட்டு, பணி நியமன ஆணைகள் வழங்கிய 4 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

போலியான நீதிமன்ற முத்திரைகளை பயன்படுத்தி பணி  நியமன ஆணை கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்ற பதிவாளர் சார்பில் கடந்த ஆண்டு சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து தொடர் விசாரணை மேற்கொண்ட போலீசார், தேனி மற்றும் திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த நாகேந்திரன்,  சுருளிராஜன் உள்பட 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 போலி நீதிமன்ற முத்திரைகள், 25 போலி பணி நியமன ஆணைகள் உள்ளிட்டவை  பறிமுதல் செய்யப்பட்டன.

 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.