எதிர்வரும் திங்கட்கிழமை நான்காவது டோஸ் தடுப்பூசி வழங்க நடவடிக்கை

கொவிட் 19 வைரசு தொற்றுக்கெதிராக வழங்கப்படும் நோய்த்தடுப்பு தடுப்பூசியின், நான்காவது டோஸை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (06) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இதனை தெரிவித்தார்.

இதற்கமைவாக பூஸ்டர் தடுப்பு மருந்தின் இரண்டாவது டோஸ் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வழங்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் இதன்போது மேலும் குறிப்பிட்டார்.

20 – 60 வயதிற்கு உட்பட்ட எதிர்மறை நோய்த்தடுப்பை கொண்டவர்களுக்கு தடுப்பூசியை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.12- 16 வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு முதலாவது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசியை வழங்குவதற்கும் சிபாரிசு செய்யப்பட்டிருப்பதாகவும் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.