புதுச்சேரி : ‘எழுத்தர் பணியிடங்களுக்கும் வயது வரம்பை நீட்டிக்க வேண்டும்’ என, புதுச்சேரி ராஜீவ் யுவக்கேந்திரா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அமைப்பின் நிறுவனர் வெங்கடாஜலபதி வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரி அரசின் நிர்வாக சீர்திருத்தத் துறை மூலம் எல்.டி.சி., யூ.டி.சி., பணியிடங்கள் நிரப்பப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
இது, படித்த இளைஞர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக எல்.டி.சி., யூ.டி.சி., தேர்வுகளை எழுத இளைஞர்கள் தயாராகி வந்தனர். ஆனால், இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த கால அரசுகள் முன் வராததால் வயது முதிர்ந்து அவர்களுக்கான பணிவாய்ப்புகள் பறி போய்விட்டது. புதுச்சேரி போலீஸ் தேர்வில் வயது வரம்பை நீட்டிப்பு செய்து அரசாணை வெளியிட்டு தேர்வுகள் நடத்தப்பட்டது.
அதுபோன்று, எல்.டி.சி., மற்றும் யூ.டி.சி., பணியிடங்களுக்கும் வயது வரம்பை நீட்டிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரி : ‘எழுத்தர் பணியிடங்களுக்கும் வயது வரம்பை நீட்டிக்க வேண்டும்’ என, புதுச்சேரி ராஜீவ் யுவக்கேந்திரா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அமைப்பின் நிறுவனர் வெங்கடாஜலபதி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.