எழுத்தர் பணியிடங்களுக்கு வயது வரம்பை நீட்டிக்க கோரிக்கை| Dinamalar

புதுச்சேரி : ‘எழுத்தர் பணியிடங்களுக்கும் வயது வரம்பை நீட்டிக்க வேண்டும்’ என, புதுச்சேரி ராஜீவ் யுவக்கேந்திரா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அமைப்பின் நிறுவனர் வெங்கடாஜலபதி வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரி அரசின் நிர்வாக சீர்திருத்தத் துறை மூலம் எல்.டி.சி., யூ.டி.சி., பணியிடங்கள் நிரப்பப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

இது, படித்த இளைஞர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக எல்.டி.சி., யூ.டி.சி., தேர்வுகளை எழுத இளைஞர்கள் தயாராகி வந்தனர். ஆனால், இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த கால அரசுகள் முன் வராததால் வயது முதிர்ந்து அவர்களுக்கான பணிவாய்ப்புகள் பறி போய்விட்டது. புதுச்சேரி போலீஸ் தேர்வில் வயது வரம்பை நீட்டிப்பு செய்து அரசாணை வெளியிட்டு தேர்வுகள் நடத்தப்பட்டது.

அதுபோன்று, எல்.டி.சி., மற்றும் யூ.டி.சி., பணியிடங்களுக்கும் வயது வரம்பை நீட்டிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.