கட்டாய மதமாற்றத்தை தடை செய்யக்கோரிய வழக்கு விசாரணைக்கு உகந்ததே! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: கல்வி நிலையங்களில் கட்டாய மதமாற்றத்தை தடை செய்யக்கோரிய விசாரணைக்கு உகந்ததே என்று கூறிய சென்னை உயர்நீதி மன்றம், தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்து, பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

கல்வி நிலையங்களில் கட்டாய மதமாற்றத்தை தடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு  சென்னை உயர்நீதி மன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், கல்வி நிறுவனங்களில் கட்டாய மதமாற்றம் தொடர்பாக புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பூர், கன்னியாகுமரி தவிர வேறு எந்த இடத்தில், புகார் வரவில்லை எனக்கூறப்பட்டது.

இதையடுதுது கருத்து தெரிவித்த நீதிபதிகள், கட்டாய மதமாற்றத்தை தடுக்க விதிகளை வகுப்பதில் அரசுக்கு என்ன சிரமம் உள்ளது என்று கேள்வி எழுப்பியிருந்தது. தொடர்ந்து வழக்கை நாளை (இன்று) விசாரிக்கப்படும் என ஒத்தி வைத்தது.

இதையடுத்து வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின் போது, தமிழகஅரசு தரப்பில், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது, அதனால் அதை தள்ளுபடி செய்யப்பட வேண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அதை ஏற்க மறுத்த நீதி மன்றம்,  கல்வி நிலையங்களில்  கட்டாய மதமாற்றத்தை தடை செய்யக் கோரும் வழக்கு விசாரணைக்கு உகந்ததே என கூறியதுடன், இதுகுறித்து தமிழகஅரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.