கனடாவில் 10 நாட்களாக காணாமல் போன தமிழ்ப்பெண்! அவர் குறித்து புகைப்படத்துடன் வெளியான முக்கிய தகவல்


கனடாவில் பத்து நாட்களுக்கு மேலாக தமிழ்ப்பெண்ணொருவர் காணாமல் போயுள்ளார்.

அவர் தொடர்பான முக்கிய தகவல்களை ரொறன்ரோ பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி ப்ரியா கேசவன் (65) என்ற பெண் கடந்த மாதம் 26ஆம் திகதி செவ்வாய் கிழமையன்று பிஞ்ச் அவென்யூ கிழக்கு பகுதியில் கடைசியாக காணப்பட்டார்.

இதன்பின்னர் ப்ரியா கேசவன் காணாமல் போயுள்ளார். 5 அடி 3 அங்குலம் உயரம் கொண்ட அவர் தோள்பட்டை வரை நீளமான தலைமுடியை கொண்டிருப்பார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கனடாவில் இரயிலில் தனியாக பயணித்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த நிலை! ஆண் ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்ட பொலிஸ்

ப்ரியா கேசவனின் பாதுகாப்பு குறித்து பொலிசாருக்கு கவலை ஏற்பட்டுள்ளது.
அவர் குறித்து எந்தவொரு தகவல் தெரிந்தாலும் உடனடியாக பொலிசாரை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒரு நபர் எந்த நேரத்தில் காணாமல் போனாலும் உடனடியாக தங்களிடம் புகார் அளிக்கலாம் எனவும் 24 மணி நேரத்திற்கு எல்லாம் காத்திருக்க வேண்டியதில்லை எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.