கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்கியபோது விஷவாயு தாக்கி 26 வயது இளைஞர் உயிரிழப்பு!

சென்னை ஆவடி அருகே அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கியதில் 26 வயது இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பருத்திப்பட்டு நிரஞ்சன் நகரில் உள்ள ஆப்டிமா என்ற அடுக்குமாடி குடியிருப்பில், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முத்து என்பவர் தொட்டிக்குள் இறங்கிய போது விஷவாயு தாக்கி மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அவரை காப்பாற்ற முயன்ற குணசேகரன் என்பவரும் மயங்கியதாக சொல்லப்படுகிறது. குடியிருப்புவாசிகள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் இருவரின் உடலையும் மீட்டனர்.

அதில், இளைஞர் முத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், குணசேகரன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.