பஸ், ரயில் . விமானம் போன்வற்றில் பயணிக்கும் போது பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்ற
அமெரிக்க அரசு
விதித்திருந்த கட்டுப்பாட்டை அந்நாட்டு நீதிமன்றம் அண்மையில் ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.
ஆனால் கொரோனா பரவல் மீண்டும் மெல்ல மெல்ல தலைத்தூக்கி வருவதை கருத்தில் கொண்டு அமெரிக்க அரசு மீண்டும் இந்த கட்டுப்பாட்டை கொண்டு வந்துள்ளது.
இதுகுறித்து, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ இரண்டு வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் பொது போக்குவரத்தை பயன்படுத்தும்போது முககவசங்களை அவசியம் அணிய வேண்டும்.
நாளை முதல் மே 17 வரை முழு ஊரடங்கு – பிரதமர் அதிரடி உத்தரவு!
மேலும் அதனை சரியான முறையில் அணிந்து கொள்ள வேண்டும். கொரோனா மீண்டும் பரவி வருவதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது’ என்று அந்த மையம் தெரிவித்துள்ளது.