சாலை அமைக்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு| Dinamalar

புதுச்சேரி-சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். கணபதிசெட்டிக்குளம் வடக்கு தெரு மற்றும் புதுநகர் தெருக்களை புதிதாக அமைத்து தர வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எம்.எல்.ஏ.,வுக்கு கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், தொகுதி எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில் இருந்து 16 லட்சத்து 12 ஆயிரத்து 848 ரூபாய் மதிப்பில் வடக்கு தெரு மற்றும் புதுநகர் முழுவதும் சிமெண்ட் சாலை அமைப்பதற்கு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பணியை துவக்கி வைத்தார்.சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், தரமாக சாலை அமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.