செவிலியர் கல்லுாரியில் ஒளிவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சி| Dinamalar

புதுச்சேரி : கோரிமேடு அன்னை தெரசா செவிலியர் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு மற்றும் ஒளி விளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி கருத்தரங்க கூடத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேராசிரியை மரிய தெரேசா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் பெலிசியா சித்ரா வாழ்த்திப் பேசினார்.

கல்லுாரி டீன் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.மூலக்குளம் ஈஸ்ட் கோஸ்ட் செவிலியர் கலலுாரி முதல்வர் ஜெயகவுரி சிறப்புரை ஆற்றுகையில், செவிலியர்களின் இன்றியமையாத பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.பேராசிரியை ஜாஸ்மின் ‘புளாரன்ஸ் நைட்டிங்கேல் உறுதி மொழி’யை முன்மொழிய, அதனை மாணவர்கள் வழிமொழிந்தனர். பேராசிரியர் ஜெயஸ்ரீ குருசேவ் நன்றி கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.