சொத்து தகராற்றால் நேர்ந்த விபரீதம்.. தம்பியை வெட்டிய அண்ணன்…!

சொத்து தகராற்றில் தம்பி அண்ணனை வெட்டிக் கொன்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டம், கீழப்புதூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இருக்கும் இவரது அண்ணன் வெள்ளைதுரை என்பவருக்கும் இடையே சொத்து தகராறு குறித்து அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவத்தன்று சுரேஷ் மற்றும் வெள்ளித்துரைக்கு இடையே வழக்கம்போல வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே வெள்ளைத்துரை சுரேஷை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்..

தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள வெள்ளை துறையை தேடி வருகின்றனர். சொத்து தகராறில் அண்ணன் தம்பியை கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.