ஜீ தமிழில் கோடை கொண்டாட்டம் – மே 8ல் 'அகண்டா' படம் ஒளிபரப்பு

உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக மே 8 அன்று ஒளிபரப்பாகவுள்ள 'அகண்டா' திரைப்படத்துடன் ஜீ தமிழின் கோடை பொழுபோக்கு கொண்டாட்டம் துவங்கவுள்ளது

அதிரடி-ஆக்ஷன் திரைப்படமான வலிமையை உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ஒளிபரப்பிய ஜீ தமிழ் தொலைக்காட்சி, உங்களது கோடையை கோலாகலமாக்கத் தயாராகிவிட்டது. மே மற்றும் ஜூன் மாதங்களின் 7 வாரங்களுக்கும் 7 புத்தம் புதிய திரைப்படங்களை ஒளிபரப்பி, பொழுதுபோக்கினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவுள்ளது ஜீ தமிழ். மே 8, 2022, மாலை 4.30 மணிக்கு உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ஒளிபபரப்பாகவுள்ள, நந்தமுரி பாலகிருஷ்ணாவின் 'அகண்டா' திரைப்படத்துடன் இந்த கோடைக் கொண்டாட்டம் உங்கள் ஜீ தமிழில் துவங்கவுள்ளது. போயபட்டி சீனு இயக்கியுள்ள 'அகண்டா' திரைப்படம் தனது நகரில் உள்ள அனைத்து கெட்டவர்களையும் எதிர்த்து நிற்கும் தீவிர சிவபக்தரான முரளி கிருஷ்ணாவின் (நந்தமுரி பாலகிருஷ்ணா) கதையைக் கூறுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.