தமிழ்நாட்டில் கடந்த ஒரு ஆண்டில் குற்றங்கள் குறைந்துள்ளது -டிஜிபி தகவல்

சென்னை:
சென்னையில் திருடுபோன பொருட்கள் மீட்கப்பட்டு அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டிஜிபி சைலேந்திர பாபு பங்கேற்று, மீட்கப்பட்ட பொருட்களை உரிமையாளர்களிடம் வழங்கினார். 
நிகழ்ச்சியில் பேசிய டிஜிபி சைலேந்திர பாபு, தமிழ்நாட்டில் கடந்த ஒரு ஆண்டில் குற்றங்கள் குறைந்துள்ளதாக தெரிவித்தார்.
காவல் உதவி செயலியை பொதுமக்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும் என்று காவலர்களுக்கு அறிவுறுத்திய அவர், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.