திடீரென தீப்பற்றி எரிந்த அரசு பேருந்து.. சமயோசிதமாக செயல்பட்டு பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநர்..!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததில் பயணிகள் உயிர்தப்பினர்.

மோர்பவனிலிருந்து கபர்கேடா பகுதிக்கு 25 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து, ரிசர்வ் வங்கி சதுக்கம் அருகே பேருந்தின் இஞ்சின் பகுதியில் இருந்து புகைவந்து தீப்பிடித்து எரிய தொடங்கியது.

ஓட்டுநரின் எச்சரிக்கையினால் பேருந்திலிருந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கி உயிர்தப்பிய நிலையில், பேருந்து முழுக்க மளமளவென தீ பரவி கொழுந்து விட்டு எரிந்தது.

இதையடுத்து, 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பேருந்து ஓட்டுநரின் துரித நடவடிக்கையால், பேருந்தில் இருந்த சுமார் 25 பயணிகளும் எவ்வித பாதிப்பும் இன்றி உயிர் தப்பினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.