பாலமுனை சம்பவம்:ஆராய்வதற்கென பொலிஸ் குழு

அம்பாறை மாவட்டத்தின் பாலமுனை பிரதேசவாசிகளுக்கும் பொலிசாருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் பற்றி விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சம்பவம் பற்றி விசாரிக்கவென விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பாலமுனை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வீதித் தடைக்கு அருகில் தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை நிறுத்துவதற்கு பொலிசார் முயன்ற போது அவர் பொலிசாரின் உத்தரவையும் மீறி தப்பிச் செல்ல முயன்றுள்ளார். இதன்போது அவர் சறுக்கி விழுந்ததைத் தொடர்ந்து அந்த இடத்திற்குச் சென்ற கும்பலொன்று பொலிசார் மீது தாக்குதல் நடத்தியமை தெரியவந்துள்ளது. இதனை அடுத்து நிலைமையைக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கு பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.