பூமிக்கு திரும்பினார் இந்திய வம்சாவளி விண்வெளி வீரர் ராஜா சாரி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி மையம் சென்றிருந்த இந்திய வம்சாவளி வீரர் ராஜா சாரி ,
6 மாதங்கள் ஆய்வை முடித்து இன்று பூமிக்கு திரும்பினார்.

ஐ.எஸ்.எஸ்.. எனப்படும் சர்வதேச விண்வெளி மையத்துக்கு , ஐரோப்பிய விண்வெளி அமைப்புடன் இணைந்து, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, ஸ்பேஸ் எக்ஸ்க்ரு டிராகன்’ என்ற இந்த விண்கலத்தை தயாரித்துள்ளது. இதற்கு, ‘ஆர்டெமிஸ்’ என, பெயரிடப்பட்டு உள்ளது. இதில் பயணிக்க, இந்தியாவின் தெலுங்கானாவை சேர்ந்த வம்சாவளியை விண்வெளி வீரர் ராஜா சாரி, 43, என்பவர் உட்பட, ஒன்பது ஆண் மற்றும் ஒன்பது பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

latest tamil news

இதில் மூன்று பேர் குழுவுக்கு, இந்திய வம்சாவளி வீரர் ராஜா சாரி கமாண்டராக பொறுப்பேற்றார். இந்த விண்கலம் கடந்தாண்டு நவம்பரில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்றது. அங்கு தங்கி ஆய்வு பணிகளை மேற்கொண்டது.

இந்நிலையில் 177 நாட்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியிருந்த ராஜா சாரி தலைமையிலான குழுவினர் இன்று அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள விண்வெளி தளத்தில் மூலம் பூமிக்கு வந்திறங்கினர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.