பேருந்தில் ஒரு ரூபாவை குறைத்து வழங்கிய முதியவரை கொடூரமாக தாக்கிய நடத்துனர்



பொலன்னறுவை பகுதியில் பேருந்தில் ஒரு ரூபாவை குறைத்து வழங்கிய முதியவரொருவரை பேருந்து நடத்துனர் தாக்கிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

72 வயதான சிறுநீரக நோயாளர் ஒருவர் பேருந்து கட்டணத்தை விடவும் ஒரு ரூபாவை குறைத்து வழங்கியமையால், கோபமடைந்த பேருந்து நடத்துனர் முதியவரை தாக்கியுள்ளார்.

இதன்போது காயமடைந்த நோயாளர் பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை போக்குவரத்து சபையின் பொலன்னறுவை பேருந்து சாலையில் சேவையாற்றும் பேருந்து நடத்துனரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளார்.

இதன்போது பேருந்தில் பயணித்த சிலர் அதனை காணொளியாக பதிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.