சென்னை: சட்டப்பேரவையில் இருந்து நேற்று அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த பின்னர் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:விக்னேஷ் உடம்பில் 13 இடங்களில் ரத்த காயம் ஏற்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது. இந்த வழக்கு நேர்மையாக நடக்க வேண்டுமென்றால் சி.பி.ஐ வசம் ஒப்படைக்க வேண்டும். விசாரித்த காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் மாநில காவலர்கள் விசாரித்தால் சரியாக இருக்காது. சி.பி.ஐ விசாரித்தால் தான் சரியாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.